Posts

இப்பொழுதும்

Image
இப்பொழுதும் வாழ்வு முழுவதும் கல்லூரிக் காலமாகவே இருந்திருக்கலாம், இப்பொழுதும் நண்பர்கள் ரூமில் தங்கி படித்திருக்கலாம், இப்பொழுதும் நண்பன் மறைத்து வைத்த டிபன் பாக்ஸில் உள்ள ஆம்லெட் காணாமல் போயிருக்கலாம், தோழிகளுக்கு திருமணம் ஆகாமல் இருந்திருக்கலாம், இப்பொழுதும் 'love u', 'miss u' சொல்லிக் கொண்டு இருந்திருக்கலாம், இப்பொழுதும் வார்த்தைகளின்றி பக்கத்தில் அமர்ந்திருக்கலாம், இப்பொழுதும் தொடுதலின் அடித்தளின் அன்பை உணர்ந்திருக்கலாம், இப்பொழுதும் கெட்ட வார்த்தைகளின் அர்த்தம் உணராமல் இருந்திருக்கலாம், இப்பொழுதும் கையை பிடித்துக் கொண்டு புகைப்படம் எடுத்திருக்கலாம், இப்பொழுதும் திரும்ப பார்க்க ஆசை இருந்திருக்கலாம், இப்பொழுதும் நண்பர்களை மன்னித்து ஏற்கும் மனது இருந்திருக்கலாம், இப்பொழுதும் நாளின் பெரும்பகுதி அன்பில் திளைத்திருக்கலாம், இப்பொழுதும் தனிமையை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம், இவ்வளவு ஏன், இப்பொழுதும் வாழ்ந்திருக்கலாம்...

ஆண் கடவுள்

நான் ஆண்தான் கடவுளில்லை, ஆகையால் உன் கன்னித்தன்மையை நிரூபிக்க உன்னை தீயில் விழச் சொல்லவோ, குலக் காரணங்களைச் சொல்லி உன்னை விட்டு விலகி பதினாறாயிரம் மனைவிகளுடன் வாழவோ மாட்டேன்...

Profile

Blog - https://karthikrajskr.blogspot.com/ Social activities - https://vkkillai.blogspot.com/ Goodreads - https://www.goodreads.com/review/list/50455924-karthikraj?shelf=read Imdb - https://www.imdb.com/list/ls598553495/?ref_=uspf_t_1 Facebook (not active) - https://www.facebook.com/profile.php?id=100004087404807 Instagram (not active) - https://www.instagram.com/its_skr24/

தனிமை

யார் வேண்டுமானாலும் தனிமையில் வாழலாம், இங்கு தனிமையில் அழுவதுதான் துயரம்... *** காதலோ காமமோ தேவையில்லை, மடி சாய்ந்து அழவும், அனைத்து தழுவி தேற்றவும் உறவிருந்தால் போதும்....

இடைவெளி

பறவைகள் ஒன்றும் மனிதர்களைப்போல அல்ல, எவ்வளவு இடைவெளி விட்டு இணைந்து பறக்க வேண்டும்  என்று அவற்றுக்கு தெரிந்திருக்கிறது🕊🕊

தீபாவளி நாட்கள்

தீபாவளி நாட்கள் வருடத்திற்கு ஒரு நாள்தான், அதனால் குடும்பத்தின் எல்லோரின் ஆசையையும் நிறைவேற்ற துடிக்கும் அப்பாவுக்கு தீபாவளியன்று மிஞ்சியது  பட்டிமன்றமும், ஓரே ஒரு சட்டையும் தான்.... *** தீபாவளி, கொண்டாட்டம் நிறைந்தது என்பதால், அம்மாவுக்கு, இன்று மாறாக, புது புடவையுடன், அதே அடுப்பங்கரை எண்ணெய் சட்டிக்குள் வானவேடிக்கை... *** செய்த அவமதிப்பிற்கும், திட்டிய கடுஞ்சொல்லிற்கும், வருடத்திற்க்கு ஒரு முறை, ஆத்தாவிடமே, அவள் உள்ளங்கை எண்ணெயால்  எங்கள் உடல் முழுவதும் தடவச் செய்து, மன்னிப்பை பெருகிறோம்.. ***

முப்பது வயது

முப்பது வயதுக்கு முன்பு கண்ட கனவெல்லாம் இப்பொழுது கேள்விக்குறியாக நீள்கிறது, தன்னை மட்டும் மையப்படுத்தி வாழ்ந்த வாழ்க்கையில் இப்பொதெல்லாம் நான் இருக்கிறேனா என்பது கூட தெரியவில்லை, நண்பர்கள் அந்நியமானார்கள், சக அலுவலக ஊழியர்கள் நாட்களை நீட்டித்தார்கள், காதல் கசந்தது, காமம் கசந்தது, நினைவுகள் கசந்தது , சின்ன விஷயங்களில் காணும் மகிழ்ச்சி கசந்தது, பெருள் தேடி அலைகிற வாழ்வில் பொருளற்று போகிறது வாழ்க்கை, இனி கடமைகள் தான் வாழ்க்கையா இல்லை கடமைக்கு தான் வாழ்க்கையா என எண்ணச் செய்கிறது, இருந்தும் வாழ்க்கையின் அழகே அது மறைத்து வைத்திருக்கும் அடுத்த நொடி ஆச்சரியங்கள் தான், இலக்கற்ற பறவையாய் சேமித்து வைத்த நினைவுகளுடன் பயணிப்போம்  இளைபாற இடமும்,  அன்பை பரிமார உறவும்  இருந்தால் போதும்....

கோவிலும் கழிவரையும்

Image
எங்கள் ஊரின் ஒற்றுமைக்காக எல்லோரிடமும் நன்கொடை வாங்கி ஒரு கோவிலை கட்டினோம், சிலரை கருவரையில் அமர்த்தினோம், சிலரை பிரகாரத்தில் அமர்த்தினோம், சிலரை கோபுரத்துக்கு வெளியே நிற்கச் செய்து குடமுழுக்கை மட்டும் பார்க்க செய்தோம், சிலரை கோவில் கழிவரையை மட்டும் சுத்தம் செய்ய வைத்தோம், இவையெல்லாம் கடவுளின் துணைக்கொண்டு தான்,  ஏனெனில் கடவுள் எல்லொருக்கும் பொதுவானவர்...

சிகப்புக் கொடி

நிழலில்லா நெடுஞ்சாலை,  உணவகங்களில், பசித்த வயிற்றில், நரைத்த கிழவன், நாள் முழுவதும் பச்சை கொடியை அசைக்கிறான், உணவருந்த அழைக்க, எப்பொழுது அசையும் சிகப்பு கொடி ☭ 

தொலைத்தது

Image
நாம் அனைவரும் தொலைக்கிறோம், எதையோ தேடுகையில், பின்பு தான் உணர்கிறோம் தொலைத்தது தான் வாழ்க்கை என்பதை. வாழ்வு, நிகழ்கால தருணங்களிலிருந்து கடந்த கால நினைவுகளாக ஆன பின்பு மீண்டும் தேடி செல்கிறோம் தொலைத்த நினைவுகளை... என்றுமே நாம் தொலைத்தது வந்து சேருவதும் இல்லை, நினைவுகளும் தொலையப்போவதுமில்லை... ***** உன் பிறிவு என் வாழ்வில் பெரிதாக எதையும் நிகழ்த்தவில்லை, என் மீதும் என் வாழ்வின் மீதும் ஒரு வெருப்பை ஏற்ப்படுத்தியது அவ்வளவுதான்..

சொத்து

இனி  எங்கள் வீட்டின் உள்ளே மழை பேயப்போவது இல்லை,  அந்த மழைத் துளிகளை சேகரிக்க பாத்திரங்களை தேடி எந்த கால்களும் ஓட வேண்டிய அவசியமில்லை, உறவிணர்கள் தங்க அவர்களுக்கு வசதி குறைவாக இருக்கப் போவதில்லை, விருந்தினருக்கு கழிவறை உபயோகிக்க சங்கடம் நேரப் போவதில்லை, ஆனால் சூற்றியுள்ள உறவிணர்களுடன் உன்டான நீண்ட உரையாதல் நிறைந்த  மாலைப் போழுதுகள் இனி வாய்கப் போவதில்லை, இனி வரப் போகும் எந்த வசதிகளும் மனித உரவுகளின் அருகாமையை அளிக்கப் போவதில்லை, வீடு முழுவதும் மனிதர்கள் நிறைந்த நிகழ்ச்சிகளுக்கு இனி வாய்க்குமா என்று தெறியவில்லை, பழைய வீடு என சொல்லிக் கொள்ளவும் வாழவும் அவமானமாக இருந்தாலும் அது நினைவுகளால் ஆனது, புது வீட்டில் எல்லா வசதிகளும் இருந்தாலும் செங்கல்லால் ஒரு போதும் நினைவுகளை பிரதிபளிக்க முடியாது, எங்களுடைய வீடு என்பதைவிட நம்முடைய வீடு என்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்.. கடந்துப் போவது தான் வாழ்க்கை ஆனால் கடப்பதில் தான் எவ்வளவு துயரம்..

புது வீடு

இனி  எங்கள் வீட்டின் உள்ளே மழை பேயப்போவது இல்லை,  அந்த மழைத் துளிகளை சேகரிக்க பாத்திரங்களை தேடி எந்த கால்களும் ஓட வேண்டிய அவசியமில்லை, உறவிணர்கள் தங்க அவர்களுக்கு வசதி குறைவாக இருக்கப் போவதில்லை, விருந்தினருக்கு கழிவறை உபயோகிக்க சங்கடம் நேரப் போவதில்லை, ஆனால் சூற்றியுள்ள உறவிணர்களுடன் உன்டான நீண்ட உரையாதல் நிறைந்த  மாலைப் போழுதுகள் இனி வாய்கப் போவதில்லை, இனி வரப் போகும் எந்த வசதிகளும் மனித உரவுகளின் அருகாமையை அளிக்கப் போவதில்லை, வீடு முழுவதும் மனிதர்கள் நிறைந்த நிகழ்ச்சிகளுக்கு இனி வாய்க்குமா என்று தெறியவில்லை, பழைய வீடு என சொல்லிக் கொள்ளவும் வாழவும் அவமானமாக இருந்தாலும் அது நினைவுகளால் ஆனது, புது வீட்டில் எல்லா வசதிகளும் இருந்தாலும் செங்கல்லால் ஒரு போதும் நினைவுகளை பிரதிபளிக்க முடியாது, எங்களுடைய வீடு என்பதைவிட நம்முடைய வீடு என்பதில் தான் எவ்வளவு ஆனந்தம்.. கடந்துப் போவது தான் வாழ்க்கை ஆனால் கடப்பதில் தான் எவ்வளவு துயரம்..

ஆத்தாவின் வீடு

வீடு கட்டித் தான் கண்ணை மூட வேண்டும் என்று வைராக்கியத்தோடு வாழும் ஆத்தா, தன் கண் முன்னே தன் குடும்பம் ஒவ்ஒரு செங்களாய் உடைவதை பார்த்து செத்துக் கொண்டு இருக்கிறாள்...

பொங்கள்

வருட வருடம் ஆட்கள் குறைவதால்  பொங்களும் பானையிலிருந்து  வெளிவந்து பொங்க மறுக்கிறது, ஏன் உணர்ச்சிகளும் கூட தான்.. ஆனால் அந்த பானை ஒருபொழுதும் தன் அக அளவினை குறைத்துக் கொண்டது இல்லை.. எறியும் விரகுகளில் கூட தண்ணீர் கசிகிறது..

அம்மாவின் இடம்

அம்மா எப்போழுதும் வரும் விருந்தினருக்கு சுவையாக சமைத்து தர வேண்டும் என்று தன் உழைப்பை செலுத்தியதால், அவள் ஒரு போழுதும் வந்த உறவினர்களிடம் அமர்ந்து பெச நேரம் ஒதுக்க முடிந்ததே இல்லை, ஆகையால் அவள் எப்பொழுதும் அவர்களின் பிடித்த பட்டியலில் கடைசியிடம் வைக்கிறாள்...

புதிதாய் மாறிய உறவு

Image
என் துயரத்தில் நீ இல்லை என்றதிலிருந்து எனக்கு கொஞ்சம் இடைவேளி தேவை என்ற வார்த்தையில் என்னை நிறுத்திவிட்டாய், எனக்கு தான் குழப்பம் நான் இதில் எங்கு நிற்க்க வேண்டும் என்று....  நம் வாழ்வு என்ற நட்பு இன்று அவரவர் குடும்பம் என்றானது.. நீ கதவை அடைத்தது நீ வெளியில் வாராமல் இருக்கவா இல்லை எனக்கு உள்ளே அனுமதி இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் குறைந்தது சாவி இடைவேளியிலாவது நான் செல்ல இருக்கிறது என்று நிம்மதி அடைகிறேன்.. என் நன்பன், Made for each other என்ற வார்த்தைகள் இன்று கால சூழ்நிலையில்  செத்த பாம்பாகி அடிபடுகிறது அவரவர் வாழ்க்கை துயரங்கள் என்று சிந்திக்கும் பொழுது , இந்த பத்து வருட நட்பின் நினைவுகள் நம்மை கேளி செய்கிறது இது நட்ப்பா காதலா எந்த உறவு என்ற என்னம் முன்பு எனக்கு வரக்கூடும், அனால் இப்பொழுது புரிகிறது இது தூரத்து உறவை விட தூரம் சென்று வேடிக்கை பார்க்கும் உறவு என்று. இதில் மகிழ்ச்சி என்ன வென்றால் நீ தைரியத்துடன் உன் துயரங்களை எதிர்க்கொள்வதை காண்பது மட்டும் தான்...

வயதுக்கு வருதல்

Image
வயதுக்கு வருதல் மழலை வீசும் உன்னிடம், மங்கையின் விதிகளை எப்படி திணிப்பது, ஆடி வரும் தேனே, உன் சிறகை எப்படி கட்டி வைப்பது, பிறர் கோவத்தை தாங்கிக்க முடியாத நீ, இனி வரும் வலியை எவ்வாரு பொருத்துக் கொள்வாய், பாரம் சுமக்காத உன் கையில்  இன்று குடும்ப கௌரவத்தையும், சமூக அழுத்தத்தையும் தரவுள்ளோம், நீ அழுகையில் கைக்குட்டையை எடுக்க பதறிய என் கையால் இன்று   சானிடரி நாப்கினை  கொடுக்க என் மனதில் உதிரம் கசிகிறது, உன் இந்த நாளை அனைவரும் கொண்டாடினாலும், ஒருநாள் என் கண்டிப்பு  அன்பை மீறிவிடுமோ என்ற ஐயத்தில் நான், கல்லில் கடவுளை தேடுவது போல  குழந்தையில் பெண்ணை தேடுவது எவ்வளவு அற்பம், என் ஆசையெல்லாம் ஒன்று தான், எந்த தயக்கமும் இன்றி உன்னை எப்போழுதும் அள்ளி அனைத்திடல் வேண்டும் நீ மொட்டிலிருந்து மலராக தொடங்கி விட்டாய், என் மனமோ மலர மறுக்கிறது! கார்த்திக்ராஜ்

ஆய்கவிதை

உன்னை பிரியும் நேரத்தில் என்னுல் ஒரு அழுத்தம்,  எனது வயதுடையோர் குழந்தைக்காக காத்திருக்கிறார்கள், நானோ முழுமையான உன் வருகைக்காக,  முன்பைப் போல் இப்போழுது நீ ஏன் இல்லை என்று தினம் தினம் நான் ஏங்குகிறேன், அனைவருக்கும் நீ எளிமையாக இருக்க என்னிடம் மட்டும் ஏன் இந்த கடினம், உனக்காக என் ஆசைகளை துறந்தப் போதிலும் நீ இனங்க மறுக்கிறாய், கடவுளை போல உன்னையும் முழுமையாக கான ஏங்குகிறேன்.  ஆய்😝

நடுத்தரவர்க்க இளைஞனின் வாழ்க்கை

தனது முந்தைய தலைமுறையின் நிறைவேறாத வாழ்நாள் கனவுகளை, சொற்ப்ப காலத்தில் நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைக்கு உண்டானதே, நடுத்தரவர்க்க இளைஞனின் வாழ்க்கை...

உறவுகள் தொடர்கதை

  மஞ்சு நேற்றைய நாளை நினைத்து குளித்து கொண்டிருந்தாள். தாலியில் இருக்கும் மஞ்சள் கழுத்து முழுவதும்  வழிந்தன.சிறு வயதிலுருந்து முன்பின் தெரியாதவர்களை பூச்சாண்டி என்று சொல்லி வளர்த்த சமுகம் அவளை பூச்சாண்டி இடம் ஒப்படைத்தது. நேற்று இரவு அவள் பெற்றார்களே அவளை தாசியைப் போல் மகிழ்ச்சியாக பூச்சாண்டியிடம் அணுப்பியதையும், இவள் பொம்மையாக கிடந்ததையும் நினைக்கையில் அருனின் நியாபகம்மும் வந்தது. கண்ணீர் அவள் உடலில் உள்ள சோப்பை நீக்கியது. அருனை மறந்து விடலாம் என்று நினைக்கும் நேரத்துக்குள் அவளுக்கு இந்த சடங்கு நடந்து விட்டது. புதிய இடமாக இருந்தாலும் அவளின் சொகம் அதை நினைவுப் படுத்த வில்லை. அவள் குலியலறையை விட்டு வெளியே வருகையில் பிரிக்க படாத சீதணங்கள் அப்படியே இருந்தன. இனிமேல் தனது வேலை குறைந்துவிட்டது என்று மகிழ்ச்சியில் பூச்சாண்டி யின் அம்மாவின் கால் ஒரு மேசையில் ஆடிக்கொண்டு இருந்தது. பூச்சாண்டி யின் தங்கை இவளைப் பார்த்துத் சிரித்தாள் அதற்கான அர்த்தம் மஞ்சுவுக்கு புரிந்தது. அறைக்குள் நுழைந்தாள், பூச்சாண்டி எதோ தனது வாழ்வின் பெரும் பலனை சாதித்து விட்டோம் என்ற திருப்தியில் தூங்கிக்கொண்டு இரு...